டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 17,135 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும்  17,135 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,67,144 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம்,   நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,26,477 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் 19,823 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்,   குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,03,610 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,37,057 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 23,49,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,04,84,30,732 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.