சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதிதாக மேலும்  1,562 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,17,943 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 166 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று   கொரோனா தொற்று காரணமாக 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று ம் கொரோனாவிலிருந்து 1,684 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,66,504 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது கொரோனா வார்டில் 16,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,523 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,26,33,164 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.