சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,16,381ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,44,323 ஆக உயர்ந்துள்ளது.

.தமிழ்நாட்டில் நேற்று 1,508 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,16,381ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,941 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், நேற்று ஒரே நாளில்  1,719 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 64 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 186 பேருக்கும், செங்கல்பட்டுவில் 99 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், தஞ்சையில் 70 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

சென்னையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,44,323 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் உயிரிழந்துடன், இதுவரை 8,402 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 205 பேர் குணமடைந்து, இதுவரை பேர் 5,34,166  குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில்  1,755  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

01.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 40,35,682 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 01.09.2021 அன்று 35,438 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக விவரம்: