டெல்லி: இதுவரை 1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை அரசு மீட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நல்லாட்சி சென்றடைவதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் தயாரித்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார்.

மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இன்று நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது என்று கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 85 சதவீத திட்டங்கள் வெறுமனே போய்விட்டன, மக்களைச் சென்றடையவில்லை, ஆனால் இன்று ₹ 26 லட்சம் கோடி நேரடியாக மக்களின் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது மற்றும் சேமிப்பு ₹ 2.25 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது, எனவே கற்பனை செய்து பாருங்கள்.

சேமிப்பில் பெரும்பகுதி மக்களுக்கு நேரடியாகப் பயன் அளிக்க வேண்டும்,” என்று கூறய இடிடஙசசங.  பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, இதுவரை நாடு முழுவதும்  ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. மத்திய அரசின் நிதி தற்போது ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தால் ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது என்றார்.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் கட்டமைப்பால், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இந்தத் தளத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. நாம் கோ-வின் இணைய தளம் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம்.

கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

“நாட்டின் வளர்ச்சிக்கு நல்லாட்சி மிகவும் முக்கியமானது என்றும், அரசின் கொள்கைகளின் உண்மையான பலன்கள் சாமானிய மக்களை சென்றடையும் என்றும் பிரதமர் மோடி மிகவும் உறுதியாக நம்புகிறார். அவர் எப்போதும் நல்லாட்சியை குறுக்குவழி அரசியலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். நாட்டிற்கும், குடிமக்களுக்கும், சமுதாயத்திற்கும் கேடு, நல்லாட்சி அவர்கள் அனைவருக்கும் நல்லது” என்றவர், அதனால்தான்  “பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். அதனால்தான் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது,” என்றவர்  நல்லாட்சியே அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு கூறினார்.