12189177_10153279687888041_6466454644636240564_n

“ரஜினியின் வருகை மலேசியாவையே புரட்டிப்போட்டுவிட்டது.. ஒட்டுமொத்த மலேசியர்களும் ரஜினியை பார்க்க கூடிவிட்டார்கள்”   என்று ஒருபுறம் செய்திகள் வந்துகொண்டிருக்க..    பகீர் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது புலனாய்வு ஏடு ஒன்று.

மலேசியாவில் ஹவாலா மோசடி புகாரில் சிக்கியிருக்கும் பிரபலஸ்தரின் கட்டுப்பாட்டில்தான் ரஜினி இருக்கிறாராம். அந்த ஹலாலா பிரமுகர் மீது மேலும் பல வழக்குகள் மலேசியாவில் பதியப்பட்டிருக்கிறதாம். அந்த பிரபலத்தின் இருபது பாடி கார்டுகள்தான் ரஜினியை சுற்றி நின்று எப்போதும் பாதுகாக்கிறார்களாம். அதே போல ரஜினியுடன் இருக்கும் இன்னொருவரின் நெருங்கிய உறவினர்கள் படுகோரமாக கொலை செய்யப்பட்டார்களாம். இதன் பின்னணியும் பகீர் ரகமாம். இப்படிப்பட்ட மனிதர்களை ரஜினிக்கு அருகில் அனுமதித்தது எப்படி?” என்று அச்சப்பட்டிருக்கிறது அந்த இதழ்.