சென்னை:
மகாபலிபுரம் – நெல்லூர் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சிரித்துள்ளது.
அதே வேளையில் வேலூர் மாவட்டத்திலும் 12, 13ஆம் தேதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின்  பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு எனவும், அதே நேரம் வெள்ள அபாயம் ஏற்பாடாது என்பதால் மக்கள் அஞ்சத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.