திருப்பதி

திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு ரூ. 20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் வழங்கப்பட உள்ளது.

நேற்று திருப்பதி மலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகளை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி விவரித்தார்.

அதில் ஒன்றாக தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரத்து 850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு பிரம்மோற்சவ சன்மானம் வழங்க சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள சீனிவாச திவ்ய அனுக்கிரக விசேஷ ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என்று, அவர் தெரிவித்துள்ளார்.