கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறக்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு வந்தது. அவர் பங்கேற்க மாட்டார் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர்,

”அரசியலையும், மதத்தையும் கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ராமர் கோவில் திறப்புவிழாவில், மம்தா பானர்ஜியோ, மேற்கு வங்காள அரசு அல்லது திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலோ யாரும் பங்கேற்க மாட்டார்கள்”.

என்று தெரிவித்துள்ளார்