நாக்பூர்

ன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று காங்கிரஸ் கட்சியின் 139-வது ஆண்டு நிறுவன நாள் இன்று  கொண்டாடப்படுகிறது. எனவே காங்கிரஸ் சார்பில் இன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள திக்கோரி பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டம் ‘ஹேன் தயார் ஹம்’ (நாங்கள் தயார்) என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கல்மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர் இண்டஹ் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் நிறுவன நாள் பொதுக்கூட்டம் இன்று நடப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.