டில்லி:

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி என முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதி யுமான பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா, பிரனா முகர்ஜி ஆகிய 3 பேருக்கு  பாரத ரத்னா விருது  அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி. எப்போதும் சொல்வதைபோல் இப்போதும் சொல்கிறேன் மக்களிடம் இருந்து பலவற்றை பெற்றுள்ளேன் எனக்கூறியுள்ளார்.