images (36)
பாப்பாக்களின் அம்மாக்கள் கவனிக்க…ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அம்மாக்களே. இன்ற முக்கியமான நாள். உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய தினம்.
தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை ) காலை 7 முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் செயல்படும். இரண்டாவது தவணை முகாம் பிப்ரவரி 22-இல் நடைபெறுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 43,051 மையங்களும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,652 நடமாடும் மையங்களும் நிறுவப்படும்.
இந்தப் பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் மீண்டும் அளிக்கலாம்.
உடனடியாக குழந்தையை தயார்படுத்துக்கள்.. கணவரை, சொட்டு மருந்து முகாமுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடுங்கள்!