q
சென்னை:
ன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வின்போது தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து  விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அவர்கள், “இந்த ஆண்டு தமிழ் அல்லாத  வேறு  மொழிகளில் தேர்வு எழுத அனுமதி கேட்டு, சுமார் ஏழு ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்னர். அவர்கள், தாங்கள் விரும்பும் மொழியிலேயே பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.