சென்னை

நாளை கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த 25ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டும் தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ம் தேதி முதல் நாளை வரை என 4 நாட்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதை அடுத்து நாளை கோவை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கன்னியாகுமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கும், கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும் சென்னைக்குப் புறப்பட உள்ளன.