புனே

நேற்று கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை உட்கர்ஷா பவார் திருமணம் நடந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தொடக்க வீரராகக் களம் இறங்கி விளையாடி, தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவைப் பெற்றுள்ளார்.

ருதுராஜ் சென்னை அணியின் அணித்தலைவர் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராகத் திகழ்கிறார். இவர் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.

வரும் 7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் தாம் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டு. பிசிசிஐ அனுமதி அளித்தது.

நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்குத் திருமணம் நடைபெற்றது. இவ்ர் உட்கர்ஷா பவார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.ருதுராஜின் மனைவி  உட்கர்ஸ பவார் ஒரு கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.