ஒடிசா:
டிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிக்னல் காரணமாக தான் விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் விபத்தில், கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததால் தான் ஓட்டுநர் ரயிலை இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகமான 130 கிமீ வேகத்தை விட 128 கிமீ வேகத்திலேயே ரயில் சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் லூப் லைனிற்குள் கோரமண்டல் விரைவு ரயில் நுழைந்தது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் தான் கோரமண்டல் விரைவு ரயில் மோதியது எனவும் கூறியுள்ளார்.