சென்னை

ன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

“லட்சத்‌தீவு மற்றும்‌ தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும்‌ தென்‌ தமிழகத்தை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ கடலூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்களில் ‌ ஓரிரு இடங்களில் ‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, மதுரை, சேலம்‌ கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்  பெய்யக்கூடும்‌.

வரும் 4 ஆம் தேதி நாளை டெல்டா மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, ஈரோடு, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி, கோயம்புத்தூர்‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மேலும் 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, சேலம்‌, திருச்‌சிராப்பள்ளி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வடமாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில்  நீலகிரி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, ஈரோடு, கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்‌திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு, அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.  இந்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது ”

என எச்சரிக்கப்பட்டுள்ளது.