IMG_2620

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், “குடிமகன்”களுக்கும் சிக்கல் வந்துவிட்டது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திருமழிசை, அம்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து மதுவகைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் புழல் ஏரி நிரம்பி திறந்துவிடப்பட்டதால், திருமழிசை குடோனை சுற்றி வெள்ள நீர் நிரம்பியுள்ளது. இதனால் அங்கிருந்து மது வகைகளை எடுக்க முடியவில்லை. இதே போல அம்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் குடோன்களிலும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு போதிய மதுவகைகள் வழங்கப்படவில்லை.

“இன்னும் இரண்டு அல்லதூ மூன்று நாட்களில் கடைகளில் உள்ள மதுவகைகள் விற்றுவிடும். அதற்குள் மதுவகைகள் வராவிட்டால், கடைகளை மூட வேண்டியதுதான்” என்று மதுக்கடை ஊழியர்கள்  கூறுகிறார்கள்.

– நமது சிறப்பு நிருபர்