சென்னை:
ஈ.வி.கே.எஸ் 2 நாளில் வீடு திரும்புவார் என்று காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், ஈ.வி.கே.எஸ் 2 நாளில் வீடு திரும்புவார் என்று கூறினார்.