சென்னை,

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மதுசூதனன் நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்து உள்ளார்.

புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மதுசூதனன் களமிறங்கி உள்ளார். ரவுடி கும்பல்களிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர் பதவி ஏற்றது செல்லாது என தேர்தல் கமிஷனுக்கு இன்று கடிதம் எழுதினார்.

இந்நிலையில்,  அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனின் பதவி பறிக்கப்பட்டதாவும், கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா அறிவித்து உள்ளார்.

அவருக்கு பதில். புதிய அவைத்தலைவராக கே.ஏ.செங்கோட்டையனை  நியமனம் செய்தும் அறிவித்து உள்ளார்.

அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவைத் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மது சூதனன் நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.