சேலம்:

அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் பொது செயலாளர் ஜெ. தீபா திடீரென அறிவித்துள்ளார்.


எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா அணி ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் ஜெ.தீபா பேசியதாவது;
அதிமுக மாபெரும் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கட்சியை வளர்த்தனர். ஜெயலலிதா இறப்புக் காரணம் சசிகலா தான்.

தமிழக மக்கள் அவர்களை விரட்டி அடித்துவிட்டனர். முற்றிலும் ஒதுக்கியும் விட்டனர். தினகரன் ஒரு தீய சக்தி. ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் உண்மையை முழுமையாக வெளியே கொண்டுவரவேண்டும்

இதற்கிடையே, அதிமுகவுடன் பேரவையை இணைக்க மாவட்ட செயலாளர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுத்ததாக கூறி, சில தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.