ராரே

லகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் தற்போது அந்த 2 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.   இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை தொடரில் விளையாடத் தகுதி பெறும். இப்போட்டியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியும் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி ஏற்கனவே நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி உள்ளது. அடுத்த குரூப் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணியுடன்  ஜிம்பாப்வே அணி சந்திக்க உள்ளது.

விளையாட்டு வீரர்கள்  தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கமாகும்.  இத்தகைய சூழலில் தகுதிச் சுற்றுப் போட்டியை நேரில் பார்க்க மைதானத்துக்கு வந்திருந்த ஜிம்பாப்வே நாட்டு ரசிகர்கள், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி அசத்தினர்.

சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ ல் கவனம் ஈர்த்து வருவதோடு அவர்களது செயலுக்குப் பாராட்டும் குவிந்து வருகிறது.