சென்னை:

சென்னையில் கொள்ளையடிக்கும் வீடுகளில் பெண்களை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 27). பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வ ந்த இவர் பணியை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து வீடு புகுந்து கொள்ளையடிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு ¬தாப்பேட்டையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அறிவழகன் சிக்கினார். இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அறிவழகன் கூறிய தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொள்ளையடிக்கும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அறிவழகன் கூறியது உண்மை என்பது தெரியவந்தது. சென்னை வில்லிவாக்கம், அம்பத்தூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் அறிவழகன் கொள்ளையடிக்கும் போது, தனியாக இருந்த பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அறிவழகன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். முதன் முதலில் கிண்டி அம்பாள்நகர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த பெண் சத்தம் போட்டதாகவும், கத்திமுனையில் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அனுபவம் புதுமையாக இருந்ததால் அதை தொடர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் இப்படி செய்ததாக வெளியான செய்தியை நாளிதழில் படித்த பின் அதை தானும் செய்ததாக தெரிவித்துள்ளார். 1980ம் ஆண்டில் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி அகரம் நாராயணன் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார். இவரை தொடர்ந்து சென்னையில் அறிவழகன் இதேபோன்ற செயலில் ஈடுபட்ட அறிவழகனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.