கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமாரின் நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 16 நாட்களாக ரசிகர்கள் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.