டில்லி

ந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,182 பேர் அதிகரித்து மொத்தம் 2,14,85,285 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,920 அதிகரித்து மொத்தம் 2,34,071 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,28,181 பேர் குணமாகி  இதுவரை 1,75,97,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 36,44,436 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 62,194 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கைஹ் 49,42,736 ஆகி உள்ளது  நேற்று 853 பேர் உயிர் இழந்து மொத்தம் 73,515 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 63,842 பேர் குணமடைந்து மொத்தம் 42,27,940 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,39,075 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 49,058 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,90,104 ஆகி உள்ளது  இதில் நேற்று 328 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,212 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 18,943 பேர் குணமடைந்து மொத்தம் 12,55,797 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,12,075 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 42,464 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,86,397 ஆகி உள்ளது.  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,629 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,152 பேர் குணமடைந்து மொத்தம் 13,89,515 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,90,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 26,622 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,25,916 ஆகி உள்ளது.  நேற்று 350 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,501 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,546 பேர் குணமடைந்து மொத்தம் 11,51,058 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,59,844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 24,898 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,97,500 ஆகி உள்ளது  இதில் நேற்று 195 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,974 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,546 பேர் குணமடைந்து மொத்தம் 11,51,058 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,31,468 பேர் சிகிச்சையில் உள்ளனர்.