டில்லி

ந்தியாவில் நேற்று 24,26,265 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதுவரை 2,84,40,988 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,38,013 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,63,82,897 பேர் பாதிக்கப்பட்டு 17,08,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க தற்போது நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.    தற்போது நாடெங்கும் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,26,265 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன   இதுவரை மொத்தம் 22,10,43,693 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.