டில்லி

நேற்று இந்தியாவில் 21,59,873 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  இங்கு நேற்றுவரை 2.84,40,988 பேர் பாதிக்கப்பட்டு 3,38.013 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று வரை 2,63,82,897 பேர் குணம் அடைந்து தற்போது 17,08,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்தி  சிகிச்சை அளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   இதையொட்டி நாடெங்கும் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,59,873 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  நேற்றுவரை இந்தியாவில் 35,37,82,648 மாதிரிகள் கொரோனாவுக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளன.