டில்லி

நேற்று ஒரே நாளில் நாடெங்கும் 10,65,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 53,419 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,17,87,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அதில் 1,60,726 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 1,12,29,591 பேர் குணம் அடைந்து தற்போது 3,91,956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளதால் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் நாடெங்கும் நேற்று ஒரே நாளில் 10,65,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.   நேற்று வரை 23,75,03,882 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.