தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு செய்தார்.

காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் துவங்கினார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு
வழிபாடு செய்தார்.