புதுடெல்லி: இந்திய தலைநகரில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில், இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரைபிள்-3 பிரிவுகளில், இந்திய அணிக்கு மொத்தம் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்ததால், இந்தியாவின் தங்க எண்ணிக்கை, தற்போதுவரை 12 என்பதாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் சுனிதி செளகான், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புட், தேஜஸ்வினி சவந்த், விஜய்வீர் சித்து, அனிஷ், குர்பிரீத்சிங் உள்ளிட்டோர் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 12 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலம் என்று மொத்தம் 25 பதக்கங்களை வென்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.