புனே: இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை புனேவில் தொடங்கவுள்ளது.

நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் ஆட்டம், பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்ற நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்நிலையில், கோப்பையை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடக்கவுள்ளது.

இந்திய பந்துவீச்சு இரண்டாவது போட்டியில் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக, குல்தீப் யாதவின் பந்துவீச்சு மிக மோசம். கருணால் பாண்ட்யாவும் கைகொடுக்கவில்லை. எனவே, மூன்றாவது போட்டியில் அந்த இருவரும் மாற்றப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் யஸ்வேந்திர சஹால் ஆகிய இருவரும் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரை, இந்திய அணி வலிமையாகவே உள்ளது.