சிறுமியைச் சீரழித்த கயவனை பிடிக்க நூறு சி.சி.டி.வி. காமிரா உதவி ..

பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கும் கயவர்கள் தூக்கில் போடப்பட்டாலும், டெல்லியில் இது போன்ற நிகழ்வுகள் குறையவே இல்லை.

அண்மையில் நடந்த ஒரு குரூர சம்பவம்.

டெல்லியின் பீரகார்ஹி பகுதியில் 12 வயது சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தாள்.

அப்போது திருடும் நோக்கத்தில் அந்த பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்த கயவன், கதவு திறந்து கிடந்த சிறுமியின்  வீட்டுக்குள் நுழைந்தான்.

திருடும் எண்ணத்தைக் கைவிட்ட கயவன், அந்த  சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.  கற்பை காப்பாற்றப் போராடிய சிறுமியை , அங்கிருந்த கத்தரிக்கோலால், முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாகக் குத்தி விட்டு ஓடி விட்டான்

ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமியைப் பக்கத்து வீட்டில் உள்ளோர் , டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் நூறு சி.சி.டி.வி.காமிராக்களின் பதிவுகளை  போலீசார் ஆய்வு செய்தனர்.

’மாஸ்க்’ அணிந்திருந்த அந்த கயவன் , அதனைக் கழற்றும் காட்சி, ஒரு காமிராவில் பதிவாகி இருந்தது.

அந்த அடையாளத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தில் மங்கள்புரி என்ற இடத்தில் அந்த காமக்கொடூரனை நேற்று இரவு கைது செய்தனர்.

அவன் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

-பா.பாரதி.