டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து இன்று தொடங்குகிறது. இன்றைய முதல்நாள் வேளாண் சட்டம் வாபஸ் மசோதா தாக்கல் செய்யப் படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி கள் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை மேற்கொண்டது. காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

முன்னதாக  காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டத்திற்கு இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி (சிபிபி) அலுவலகத்தில் நடைபெற்றது.