ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 375 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை, கடைசி நாளில் விரட்டிவரும் விண்டீஸ் அணி, 1 விக்கெட்டை இழந்து 60 ரன்களை எடுத்துள்ளது. தற்போதைய நிலையில், வெற்றிக்கு, அந்த அணி 81.5 ஓவர்களில் 315 ரன்களை எடுக்க வ‍ேண்டும்.

முன்னதாக, 102 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 476 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் நிசான்கா சதமடிக்க(103), பெர்னாண்டோ 91 ரன்களும், திரிமனே 76 ரன்களும், டிக்வெல்லா 96 ரன்களும், டி சில்வா 50 எடுத்ததால், இலங்கை பெரிய  ரன்களைக் குவித்தது. இதனையடுத்து, விண்டீஸ் அணிக்கு, 375 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது விண்டீஸ் அணிக்கு டிரா செய்யும் வாய்ப்புகளே அதிகம் என்பதே கிரிக்கெட் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.