சென்னை: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் தேர்வு நடக்கும் என்று செப்டம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத் துறை இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்,  நீட், ஜெ.இ.இ தேர்வுகள் நடத்த மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் உத்தர விட்டுள்ள நிலையில்,  தனித்தேர்வுகளையும்  நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது.

இதனால் துணைத் தேர்வு கட்டாயம் நடக்கும் என்றும், அதற்கான பணிகளை தேர்வுத்துறை முடுக்கி விட்டுள்ளதாகவும்  கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.