டில்லி

டுத்த முப்படை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2019 இல் இந்திய ராணுவம், கப்பல்படை, விமானப்படை என முப்படைகளை ஒருங்கிணைக்கும் விதமாக Chief of Defence Staff’ என்னும் முப்படை தளபதி என்னும் புதிய பதவி ஏற்படுத்தப்பட்டது  அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.

நேற்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.    இந்தியாவின் அடுத்த முப்படை தளபதி யார் என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.  டில்லியில் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ந்ரவனே இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு நரவனே ராணுவத் தளபதியாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இவருக்குப் பதவி மூப்பு அடிப்படையில் முப்படை தளபதி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது   மத்திய அரசு இது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள போதிலும் எவ்வித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.