சென்னை

சென்னை நகரில் பல  பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடிக்குச் சுழற்றி காரணமாகத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தது.

இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தத .  குறிப்பாக எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், சேத்துப்பட்டு, மாதவரம், வண்ணாரப் பேட்டை, கொளத்தூர், கேகே நகர், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மேலும் பொன்னேரி, செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.