இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கள் இருவரும் வெளுத்து வாங்கிவிட்டனர்!

கேஎல் ராகுல் ஒரு சிறப்பான சதம் அடித்தார் இன்றையப் போட்டியில். அதேபோன்று, மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட், வெறும் 40 பந்துகளில், 7 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 77 ரன்களை வெளுத்துவிட்டார்.

இதனால், இந்திய அணியின் எண்ணிக்கை 336 என்று உயர்வதற்கு எளிதான வழியேற்பட்டது. இன்றையப் போட்டியில் மட்டும், இந்தியாவின் சார்பில் 14 சிக்ஸர்களும், 20 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டுள்ளன.

ஒரு அணியில், ஒரே போட்டியில், மாற்று விக்கெட் கீப்பர்கள் இருவரும் இணைந்து, ஒரே சமயத்தில் பேட்டிங் செய்து அடித்து துவைத்தது குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது..!

இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும், மகேந்திரசிங் தோனியை, எதிர்காலத்தில் விஞ்சி செல்வார்கள் என்றால், அதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை!