டில்லி:

மிழகத்திற்கு பொது விநியோகத்தில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டது ஏன்  என  மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு 81.1சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மின்விநியோகம் 100%  உள்ளது. எனவே மண்ணெண்ணை அளவு குறைக்கப்பட்டது என்று கூறினார்.

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் இணைப்புகள் பெரும்பாலான மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதால் மண்ணெண்ணெய் தேவை குறைந்துள்ளது என்றும், தமிழக அரசு ரேஷன் விநியோகத்துக்கு தேவையானால்,  சந்தை விலையில் மண்னெண்ணை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த  மானிய விலை மண்ணெண்ணையில் ஒரு லட்சம் கிலோ லிட்டர் தற்போது  குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.07லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டு வந்தது.

இது  கடந்த ஆண்டு 2.04லட்சம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது அது 1 லட்சம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு கெரசின் கிடைப்பதில்  சிக்கல் எழுந்துள்ளது.

[youtube-feed feed=1]