யோத்தி 

ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு அயோத்தி நகரெங்கும் காவிக் கொடிகளில்  ஜெய் ஸ்ரீ ராம் வாசகங்கள் காணப்படுகின்றன.  

 

இன்று அயோத்தியில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் ராமர் கோவில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற உள்ளது. இன்று பாகல் 12.20 மணிக்கு ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா. பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. அப்போது ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அயோத்தி நகரத் தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. ராமர் கோவிலை நோக்கிய பிரதான சாலைகளான ராம பாதை, தர்ம பாதைகளில் நடந்து செல்லும் அனைத்து பக்தர்களும் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியிருந்தனர்., அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலும் 10 வெவ்வேறு அளவுகளில் காவிக் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ராமர், அனுமன், ஜெய் ஸ்ரீ ராம் வாசகம், ராமர் கோவில் ஆகியவை அந்தக் காவிக் கொடிகளில் இடம்பெற்றுள்ளன. மேலும்  ஸ்ரீ ராமரின் ஆயுதமான வில்-அம்பு’ வடிவமைப்புடன் கூடிய தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. அயோத்தி நகரின் வீடுகள், தர்மசாலைகள், மடங்கள், கடைகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.