சென்ன‍ை: இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியான கட்டத்தில் உள்ளதோ, அப்போது தனது ஆட்டத்தை வெளிக்காட்டும் திறன் உள்ளவர் ரஹானே என்று பாராட்டியுள்ளார் ரோகித் ஷர்மா.

இன்று, ரோகித்துடன் இணைந்து, இந்தியாவுக்காக 162 ரன்கள் சேர்த்த ரஹானே, தான் 67 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இந்த ஜோடி, இந்திய அணி 300 ரன்களைத் தொடுவதற்கு உதவி புரிந்தது.

ரோகித் கூறியுள்ளதாவது, “எங்களது முன்னணி வீரர்களுள் ரஹானேவும் ஒருவர். இன்று அவர் பிரமாதமாக ஆடியதோடு, சில முக்கியமான ஷாட்களையும் ஆடினார். அணிக்கு எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ, அப்போதெல்லாம் அந்த தேவையை ஈடுசெய்யும் பேட்ஸ்மேனாக பரிணமிக்கிறார் ரஹானே.

உணவுக்கு முன்னதாகவே 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில் களமிறங்கினார் ரஹானே. அப்போது, பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தி, திறமையாக ஆடினார்” என்றுள்ளார் ரோகித்.