சென்னை:
மிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பள்ளிகள் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை  நடத்தி வருகிறார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டது.  தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மூடப்பட்ட பள்ளிகள் எப்போது..? திறக்கப்பட உள்ளது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து,  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10-ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.