லக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப்  தகவல் பயன்பாட்டு சமூக வலைதளம், பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதுப்புது அம்சங்களை உட்புகுத்தி மெருகேற்றி வருகிறது.

தற்போது, வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை அடுத்தவர்கள் காண முடியாதவாறு, முக அடையாளம் மற்றும் விரல் ரேகை மூலம் பாதுகாக்கும் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதி சோதனை முறையாக, ஆப்பிள் ஐபோனில் மட்டுமே தற்போது அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களிலும் எதிர்பார்க்கலாம்.

தற்போது வெளியாகி உள்ள பீட்டா அப்டேட்டில்,   2.19.20.19 என்ற வெர்ஷன் எண் கொண்ட வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதியை இப்போதே பயன்படுத்தலாம் என தெரிவித்து உள்ளது.

இதில் ஸ்கிரீன் லாக் என்ற புதிய வசதி உள்ளது. அதனைத் தேர்வு செய்யும்போது பின், பேட்டன் போன்றவற்றுடன் கைரேகை சென்சார் மூலம் வாட்ஸ்ஆப்பை லாக் செய்யும் வசதிகள் அளிக்கப்படுகிறது.

ஐபோன்10 (iPhone X) பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக முக அடையாளத்தை வைத்து லாக் செய்யும் வசதியும் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

வாட்ஸ்ஆப்பை இந்த முறையில் லாக் செய்தாலும் போன் லாக் செய்திருக்கும்போது வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை லாக் எடுக்காமலே பேச முடியும். இதேபோல போன் லாக் செய்யப்பட்ட நிலையில் வரும் மெசேஜுக்கும் பதில் அளிக்க முடியும்.

இந்த வசதிகளை பயன்படுத்த முதலில் போன் செட்டிங்ஸில் கைரேகை (மற்றும் முகம்) ஆகியவற்றைப் லாக் செய்வதற்கான வழிகளாக பதிவு செய்ய வேண்டும்.

ஏதாவது பிரச்னையால் கைரேகை சென்சார் அல்லது முக அடையாளம் மூலம் லாக் நீக்கப்பட முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கிறது.