இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு என்னாச்சு?
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் ’முன்னாபாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர்.
நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டது.
எனினும் மேலும் பல சோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட உள்ளன.
’’அவரது உடம்பில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால், மேலும் பல சோதனைகள் செய்துள்ளோம்.அதன் முடிவுகள் வர வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார், டாக்டர் ஜலீல் பார்கர்.
இவர் , கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் தான் குணம் அடைந்து பணிக்குத் திரும்பியுள்ளார்.
சஞ்சய்தத், தனது 61- வது பிறந்த நாளை கடந்த 29 ஆம் தேதி கொண்டாடினார்.
அப்போது தான் நடித்துள்ள ’கே.ஜி.எஃப்- 2’’ படத்தின் முன்னோட்ட போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
மற்றொரு இந்தி நடிகர் அபிஷேக்பச்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்குப் பின் நேற்று தான் ‘டிஸ்சார்ஜ்’’ ஆனார் .
-பா.பாரதி.