டில்லி:

பிரதமர் மோடி நேற்று இரவு மக்களியே வானொலி மூலம் உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து  அவர்  பேசிய உரை இங்கே தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி, பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடி மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

மோடி என்ன பேசப்போகிறார் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்,  தொடக்கத் தில் மாலை 4மணிக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்து.  பின்னர் அது மாற்றப்பட்டு இரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்கு வணக்கம் கூறி தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி,  காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது. 370, 35ஏ இருந்ததால்  அங்கு பயங்கரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. இதன் காரணமாக  காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது.

ஒரு தேசமாக, ஒரு குடும்பமாக, ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பல உரிமைகளை இழந்த ஒரு அமைப்பு மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கு இது ஒரு பெரிய தடையாக இருந்தது, அந்த அமைப்பு அகற்றப்பட்டுள்ளது தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தரவேண்டும். ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன.

தற்போது, 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது.  காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும். 3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான். ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ ஆகியவை பயங்கரவாதம், மந்தமான வளர்ச்சி, குடும்ப அடிப்படையிலான அரசியல் மற்றும் ஊழல் ஆகியவற்றை மட்டுமே ஊக்குவித்தன

காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர். என்று கூறியவர், ஜம்மு காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக் கும் ஊக்கம் அளிக்கப்படும்.

காஷ்மீர் மக்களின் உரிமை நிலை நாட்டப்படும்; அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும் என்றார்.

ஜே & கேவில் பல தசாப்தங்களாக வம்ச ஆட்சி இளைஞர்களை அரசியல் தலைமையிலிருந்து தடுத்தது. இனிமேல் அனைவரும் அரசியலில் பங்கேற்கலாம். தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம்.

ஜே & கேவை நேரடியாக மத்திய நிர்வாகத்தின் கீழ் ஒரு குறுகிய காலத்திற்கு வைத்திருப்பதற்கான முடிவு நன்கு சிந்திக்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறுகிறார்

1947க்கு பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன, ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்க வில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும்.

அனைவருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன், ஜே & கே மற்றும் லடாக் மக்களின் எந்தவொரு பிரச்சினையும் எங்கள் பிரச்சினை என்று தெரிவித்தார்.

“ஜம்மு-காஷ்மீரில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக திகழும் சாத்தியம் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய இடங்களில் காலியாக உள்ள அனைத்து பதவிகளும் நிரப்பப்படும், இது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அவர்கள் தகுதியுள்ள வேகத்தில் உருவாகவில்லை.

இனிமேல்  ஜே & கே மக்கள் தங்கள் சொந்த பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள்.

காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி நடத்தலாம். காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவி திட்டங்கள் அமலாகும்.

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு துணையாக 130 கோடி மக்களும் இருக்கிறார்கள். சிறிது சிறிதாக ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலை திரும்பும். ராணுவம் மற்றும் காவல்துறையின் பணிகள் பாராட்டும்படியாக உள்ளது

இன்றைய சூழலை அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொண்டு மாறி வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையை நாம் யாரும் பறிக்கக் கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள், இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சர்தார் படேல், பாபா சாஹேப் அம்பேத்கர், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல்ஜி மற்றும் கோடி தேசபக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது.

இவ்வாறு மோடி உரையாற்றினார்.