சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவு ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

சமூக வலைதளங்களில், #TNPSC என்ற ஹேஷ்டேகையும் #WeWantGroup2Results  என்ற ஹேஷ்டேகையும் இந்திய அளவில்  தமிழக இளைஞர்கள் டிரெண்டாக்கி வந்த நிலையில்,  தேர்வு முடிவு தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு நடைபெற்று  இரண்டு ஆண்டுகளை எட்டும் நிலையில், இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின் கோரிக்கை ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இன்று ( டிசம்பர் 16-ஆம் தேதி) எக்ஸ் தளத்தில் TNPSC என்ற ஹேஷ்டேக் மற்றும் ஹேஷ்டேக் WeWantGroup2Results  டிரெண்ட் ஆன  நிலையில்,  தேர்வர்களின் கோரிக்கை ஒரே நாளில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில்  அதாவது ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இதையடுத்து 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பணிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பணிகளுக்கும் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  இதற்கான முடிவுகள் வெளியிடுவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின் வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.

15,122022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023 ஆம் ஆண்டில் 150-2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளயிடப்பட்டது. தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் 14 தேர்வுகள்) நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 இலட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர். தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.

குரூப் 2 முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும் மேலும் ஒரேநேரத்தில் மதிப்பீடு செய்யவேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்த வேண்டியிருந்ததாலும் தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் குரூப் 2 முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும் குரூப் 2 தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் குரூப் 2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.