கொல்கத்தா:  நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மேற்​கு​வங்க  மாநிலத்தில் முதல் கட்ட சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் நிறைவடைந்​தது.

இதையடுத்து நாளை தேர்தல் நடைபெறுஙட 152 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு இவிஎம் இயந்திரங்கள் உள்பட தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கும்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த பல தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், கடுமையான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதுமுதல் கட்டமாக  152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று (நாளை)  தேர்தல் நடைபெறுகிறது.

2வது கட்டமாக  142 தொகுதிகளுக்கு  ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான  வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 02  தொடங்கிய நிலையில்,  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.  இந்த தொகுதிகளில் ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இரு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவுகள்  மே 4ந்தேதி எண்ணப்படுகிறது.

இந்த நிலையில்  மேற்​கு​வங்​கத்​தில்  முதல்​கட்​டமாக வாக்குப்பதிவுநடைபெற உள்ள  152 தொகு​தி​களில்,   மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர்.

பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடும் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. அந்த தொகு​தி​யில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் பாஜக தொண்​டர்​களுக்​கும் இடையே பல்​வேறு இடங்​களில் மோதல்​கள் நடை​பெற்​றன. இதை கருத்​தில் கொண்டு முதல்​கட்ட தேர்​தலில் மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

மேலும்,   இன்​றும் நாளை​யும் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மோட்​டார் சைக்​கிள்​கள் போக்​கு​வரத்​துக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

மேலும் நாளை  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்​டார் சைக்​கிள்​களில் ஒரு​வர் மட்​டுமே பயணம் மேற்​கொள்ள வேண்​டும். பின்​இருக்​கை​யில் யாரை​யும் ஏற்​றக்​கூ​டாது என்று தேர்​தல் ஆணை​யம் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டுள்​ளது.

மருத்​துவ தேவை, குடும்ப விழாக்​கள், பள்​ளி​களுக்கு மாணவ, மாண​வியரை அழைத்​துச் செல்​வது ஆகிய பணி​களுக்கு மட்​டும் விதி​விலக்கு அளிக்​கப்​பட்டு உள்​ளது.

இதே​போல வீட்டு உபயோக பொருட்​கள், உணவு வகைகளை விநி​யோகம் செய்​யும் ஊழியர்​களுக்​கும் வி​தி​விலக்​கு அளிக்​கப்​பட்​டு உள்ளது. இதனால் மேற்குவங்க மாநிலம் பரபரப்பாக காணப்படுகிறது.

[youtube-feed feed=1]