கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இன்று மேற்கு வங்காள சட்டமன்றத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்ற இருந்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றதாகக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பாஜக உறுப்பினர்களின் கடும் அமளியால் ஆளுநர் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்  மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இருவரின் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட அம்சங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.