கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது, எனவே அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

நேற்ற் நடந்த அரசு நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்குப் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை அறிவிப்பதாகவும் அந்த அறிவிப்புகளுக்குத் தனது சமூக வலைத்தள பக்கத்தை அனைவரும் பின்தொடருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில்,

“ஏப்ரல் 2024 முதல், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.750 ஊதிய உயர்வு வழங்கப்படும். மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.”

என்று அறிவித்துள்ளார்.