கொல்கத்தா,

ட மாநிலங்களில் சில மாதங்களாக நிகழ்ந்து வரும் கடும் பனி மூட்டம் காரணமாக பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பனி மூட்டம் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், சாலையோரம் உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த சோக சம்பத்தில் 7 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.

மேற்குவங்க மாநிலத்தில்  முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்கா நகரில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் சென்ற பேருந்து, பனி மூட்டம் காரணமாக பாதை தெரியாமல், சாலையொரத்துக்கு சென்று அங்குள்ள குளத்துக்குள் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்த  அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 7 பயணிகள் நீரில் மூழ்கி  உயிரிழந்த நிலையில், மேலும்  20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.