கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை 4ம் கட்டத் தோ்தல் நடக்கிறது.

மேற்கு வங்க சட்டசபை 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிகிறது. மொத்தம் 1,15,81,022 வாக்காளா்கள் வாக்களிக்கும் 4ம் கட்டத் தோ்தலில், 373 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

டோலிகுங்கே தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சா் பாபுலால் சுப்ரியோவுக்கு எதிராக மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அரூப் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். 44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 கம்பெனி பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கூச் பிகார் மாவட்டத்தில் மட்டும் 187 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  வாக்கு பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடந்து மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.